பிரதமர்: எம்எச்370 விமானத்துடன் காணாமல்போனவர்களை மலேசியர்கள் ஒன்றுபட்டு நினைவுகூர்கின்றனர்

najibமலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  விமானம்  காணாமல்போய்  ஓராண்டு  ஆகும்  வேளையில்  அந்தத்  துயரச் சம்பவத்தில்  காணமல்போனவர்களை  நினைவுகூர்வதிலும்  கெளரவிப்பதிலும்  மலேசியர்கள்  ஒன்றுபட்டு  நிற்பதாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

விமானத்தைத்  தேடும்பணி  தொடர்வதாகவும்  அப்பணியில்   மலேசியா  தன்னை  முழுமையாக  ஈடுபடுத்திக்  கொண்டிருப்பதாகவும்  கூறிய நஜிப், எம்எச்370  கண்டுபிடிக்கப்படும்  என்றும்  நம்பிக்கை  தெரிவித்தார்.

“இன்று  நாம்,  மலேசியர்  50 பேர்  உள்பட  எம்எச்370-இல்  பயணித்த  239 பேரையும்  நினைவுகூர்வதிலும்  கெளரவிப்பதிலும்  ஒன்றுபட்டு  நிற்கிறோம். அவர்களுக்காகவும்  அவர்களின் பிரியமானவர்களுக்காகவும்  பிரார்த்தனை  செய்கிறோம்.  அவர்களின்  சோகத்தைப்  பகிர்ந்து  கொள்கிறோம்”, என நஜிப்  ஓர்  அறிக்கையில்  தெரிவித்தார்.