முகைதின் பதவி விலக வேண்டும்: ரபிஸி

muhideenதுணைப்  பிரதமர்  முகைதின்  யாசினும்  செராஸ்  அம்னோ  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷியும்  பதவி  விலக  வேண்டும்  என  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி  கோரிக்கை  விடுத்துள்ளார்.

அரசாங்கம்  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி)  நொடித்துப்  போகாமல்  காப்பாற்றப்படும்  என்று  அறிவித்ததை  அடுத்து  முகைதின்  சொன்னது  பொய்யாகிப்  போனது  என்பதால்  அவர்  பதவி  விலக  வேண்டும்  என  ரபிஸி  கூறினார்.

சைட்  அலியைப்  பொறுத்தவரை  அம்னோவில்  என்ன  நடக்கிறது  என்பதையே  அறியாதவராய்  இருக்கிறார்  என்றவர்  சுட்டிக்காட்டினார்.

“கட்சியில்  நடப்பதறியாதிருக்கிறார். எனவே, கட்சியைப்  பிரதிநிதிப்பதாகக்  கூறிக்கொண்டு  அவர்  எதையும்  பேசக்கூடாது”, என்று  பாண்டான்  எம்பி-ஆன  ரபிஸி  குறிப்பிட்டார்.

முகைதின்,  கடந்த  வாரம்,  அரசாங்கம்  கடனில்  சிக்கியுள்ள அந்நிறுவனத்தை  மீட்டெடுக்கக்  கூடாது  என்று  கூறி  இருந்தார்.  அனால்,  இரண்டாவது  நிதி  அமைச்சர்  ஹுஸ்னி  ஹனாட்ஸ்லா, 1எம்டிபி-க்குக்  கடனளிப்பதற்கு ரிம950 மில்லியன்  ஒதுக்கப்பட்டிருப்பதாக  இன்று  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.