அண்மையில் நாடு முழுவதிலும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யும் நடவடிக்கைகள் இப்போது நடைபெற்று வருவதால் வெள்ளத்தின்மீது அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்க வேண்டிய அவசியமில்லை எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் திருத்தி அமைக்கும் பணிகள் நடைபெறுவதுடன் வெள்ளப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தொடக்க ஒதுக்கீடாக ரிம800 மில்லியனை ஒதுக்கியுள்ளது என நஜிப் (பிஎன் -பெக்கான்) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே, ஆர்சிஐ தேவையில்லை.
ஆனால், வெள்ளம் தொடர்பான நிலையான இயக்க நடைமுறைகளையும் நிவாரணப் பணிகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவையிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.