இஸ்ஸாவை அடுத்து போலீஸ் நூஹாவிடம் விசாரணை செய்யும்

nurul nuhaஅன்வார்  இப்ராகிமின்  மூத்த மகள்  நூருல்  இஸ்ஸாவை விடுதலை  செய்த  போலீசார்  அடுத்து  அவரின்  தங்கை  நூருல்  நூஹாவை  விசாரணைக்கு  அழைத்திருக்கிறார்கள்.

இன்று  டாங்  வாங்கி  போலீஸ்  நிலையம்  சென்றிருந்தபோது  தம்மை  அணுகிய  போலீசார்  தம்மிடம்  வாக்குமூலம்  பதிவுசெய்ய  விரும்புவதாக  தெரிவித்தனர்  என  நூருல்  நூஹா  மலேசியாகினியிடம்  கூறினார்.

“எப்போது  போலீஸ்  நிலையம்  வர  வேண்டும்  என்பதை (என் வழக்குரைஞரிடம்)த்  தெரிவிப்பதாக  சொன்னார்கள்”, என்றாரவர்.

மார்ச்  7  கித்தா  லவான்  பேரணி  தொடர்பாக  போலீசார்  தம்மை  விசாரிக்க  விரும்புவதாக அவர்  கூறினார். மேல்விவரம்  எதுவும்  அவரிடம்  தெரிவிக்கப்படவில்லை.

அன்வாரை  விடுவிக்கக்  கோரி  சனிக்கிழமை  தோறும்  நடக்கும்  பேரணிகளில்  நூருல்  நூஹா  தவறாமல்  கலந்துகொண்டு  வந்திருக்கிறார்.