எம்பி: ஹுடுட்டைக் குறைகூறுவோர் சமய நம்பிக்கையற்றவர்கள்

hud1993 ஷியாரியா  குற்றவியல்  சட்டத்தில்  திருத்தம்  செய்வதற்காகக்  கொண்டுவரப்படும்  சட்டவரைவை  எதிர்ப்பவர்களைச்  “சமய  நம்பிக்கையற்றவர்கள்”  என வருணித்திருக்கிறார்  கிளந்தான்  மந்திரி  புசார்  அஹ்மட்  யாக்கூப்.

இன்று  அச்சட்டவரைவை  கிளந்தான் சட்டமன்றத்தில்  தாக்கல்  செய்த  அஹ்மட்,  அவர்கள்  அதைக்  “கொடூரமானது, மனிதத்தன்மையற்றது”  என்று  குறைகூறியிருப்பதாகக்  குறிப்பிட்டார்.

“அது  கண்மூடித்தனமான  குற்றச்சாட்டு”, என்றாரவர்.

அச்சட்டம் முஸ்லிம்-அல்லாதாரிடம்  அமல்படுத்தப்படாது  என்ற  உத்தரவாதத்தையும்  அஹ்மட்  தெரிவித்தார்.

“இது  முஸ்லிம்களிடையே  மட்டும்தான்  அமல்படுத்தப்படும்  என்பதைத்  தெளிவுபடுத்த  விரும்புகிறேன்.

“அதாவது  இச்சட்டம்  முஸ்லிம்-அல்லாதார்மீது  பயன்படுத்தப்படாது”, என்றவர் வலியுறுத்தினார்.