ரபிஸியின் சுற்றறிக்கைக்காக பிகேஆர் தலைமையகத்தில் போலீஸ் திடீர்சோதனை

 

rafiziarrestedஇன்று பின்னேரத்தில் போலீசார் பிகேஆரின் தலைமையகத்தில் அதன் தலைமைச் செயலாலர் ரபிஸி ரம்லியின் அறைக் கதவை உடைத்து திடீர்சோதனை மேற்கொண்டனர்.

ரபிஸி கடந்த வெள்ளிக்கிழமை பிகேஆரின் உறுப்பினர்களை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கித்தா லவான் பேரணியில் கலந்து கொள்ளுமாறு வெலியிட்டிருந்த ஒரு சுற்றறிக்கைக்காக அவர் கைது செய்யப்பட்டார்.

ரபிஸியின் வழக்குரைஞரான பிகேஆர் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன் போலீசார் ரபிஸியின் அறைக் கதவை அவருடைய அனுமதியுடன் உடைத்தனர் என்று கூறினார்.

அவருடை அறையின் சாவி எவரிடமும் இல்லாததால் அவர்கள் கதவை உடைக்க ரபிஸி ஒப்புக் கொண்டார்.

அவரது அறையிலிருந்து போலீசார் நான்கு கணினிகளையும், ரபிஸியின் சுற்றறிக்கையின் நகல் ஒன்றையும், ரபிசிஸி பேரணி குறித்து வெளியிட்டிருந்த ஊடகச் செய்தியின் நகலையும் எடுத்துச் சென்றனர் என்று பிகேஆரின் தொடர்புத்துறை இயக்குனர் பஹாமி பாட்ஸி கூறினார்.