சமூக ஆர்வலர்களுக்கு விளக்கமளிக்க சுங்கத் துறை தயார்

customபொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி)  பற்றி  நேரடி  விளக்கம்  பெற  ஜிஎஸ்டி-எதிர்ப்பாளர்  விரும்பினால்  அவர்களுக்கு  இலவசமாகவே  விளக்கமளிக்க  சுங்கத்  துறை  முன்வந்துள்ளது.

சுங்கத்  துறை,  ஜிஎஸ்டி-எதிர்ப்பு  சமூக  ஆர்வலர்கள்,  கடந்த  வாரம்  கூட்டரசு  சுங்கத்  துறையை   முற்றுகையிட்டபோது  கொண்டுவந்த  106  கேள்விகளுக்கும்  அதன்  இணையத்தளத்தில் பதிலளித்துள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது.

“அவர்களுக்கு  நேரடி  விளக்கம்தான்  தேவை  என்றால், அதற்காக  ஒரு  பயிலரங்கம்  ஏற்பாடு  செய்யவும்  தயாராக  இருக்கிறோம்”, எனச்  சுங்கத்  துறை  தலைமை  இயக்குனர்  கசாலி  அஹமட்  கூறினார்.