பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறைசொல்வதில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் எல்லைமீறிச் சென்று விட்டதாக மசீச இளைஞர் தலைவர் சோங் சின் வூன் கூறினார்.
நஜிப் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்காததால் அவருக்கு மக்களின் ஆதரவு குறைந்து விட்டதாக மகாதிர் கூறுவது பற்றிக் கருத்துரைத்த சோங், அதைப் புள்ளிவிவரங்களுடன் நிரூபிக்க முடியுமா என வினவினார்.
நஜிப்பின் தலைமைத்துவத்தில் காஜாங், தெலோக் இந்தான் இடைத் தேர்தல்களில் பிஎன் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததாக அவர் கூறினார்.
“நஜிப் கடுமையாகப் பாடுபட்டு வருகிறார், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்”, என்று கூறியவர் நஜிப்புக்கு பிஎன்னின் ஆதரவு என்றும் உண்டு என்றார்.
மேலும், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் பற்றியும் புதிய ஜெட் விமானம் வாங்கியது பற்றியும் தம் குடும்பத்தாரின் வாழ்க்கைமுறை பற்றியும் மங்கோலிய பெண் அல்டான்துன்யா கொலை பற்றியும் நஜிப் அடிக்கடி விளக்கம் கூற வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சொன்னார்.
“அவர் பல தடவை அவை பற்றி விளக்கம் அளித்து விட்டார். பிரதமர் என்ற முறையில் அவர் நாட்டை நிர்வகிக்க வேண்டுமே தவிர ஒவ்வொரு நாளும் இந்த விவகாரங்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது”, என்றார்.


























ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது ….
இவனுக்கு சொந்தமாக யோசிக்கும் புத்தி இருக்கிறதா
(மசீச இளைஞர் தலைவர் சோங் சின் வூன்)…. உப்பை தின்றெவன் தண்ணீர்
குடிச்சிதான் ஆகனும். அதான் விதி.
இவன் ஏதோ கேசில் மாட்டிக்கொண்டிருக்கிறான் அதனால்தான் இந்த சீன இளைஞன் இப்படி pesuraan