ஹிஷாமுடின்: மகாதிருக்குப் பதில் அளிப்பது வீண் வேலை

hishamடாக்டர்  மகாதிர்  முகம்மட்  சுமத்தும்  ஒவ்வொரு  குற்றச்சாட்டுக்கும்  பதில் சொல்லிக்  கொண்டிருப்பதில்  அர்த்தமில்லை.

“ஒவ்வொன்றுக்கும்  பதில்  சொல்ல  வேண்டுமானால்  7 நாளும்  24 மணி  நேரமும்  அதுதான்  வேலையாக  இருக்கும்”, எனத்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  கூறினார்.

“இதன்  முடிவுதான்  என்ன? (குற்றச்சாட்டுகளின்) நோக்கம்தான்  என்ன?”, என்றவர் வினவினார்.

முன்னாள்  பிரதமர்,  அம்னோ  தலைவர்கள்  பணத்துக்கு  மட்டுமே  விசுவாசமாக   இருக்கிறார்கள்  என்று  கூறியிருப்பது  உள்பட  எல்லாக்  குற்றச்சாட்டுகளையும்  நிரூபிக்க  வேண்டும்.

“நிரூபியுங்கள். (அமலாக்கத் துறைகள்) விசாரணைகளைக் கவனித்துக் கொள்ளும்”, என்று  ஹிஷாமுடின்  கூறினார்.