இசி: நீண்ட வாரக் கடைசி வாக்காளர் குறைவுக்குக் காரணம்

ecரொம்பின்  இடைத்  தேர்தலில்  பதிவு  செய்யப்பட்ட  53,926 வாக்காளர்களில்  80 விழுக்காட்டினர்  வாக்களிப்பார்கள்  என்று  எதிர்பார்க்கப்பட்ட  வேளையில்  74 விழுக்காட்டினர்தான்  வாக்களித்திருக்கிறார்கள். வாரக்  கடைசி  நீண்டு  போனது  இதற்குக்  காரணமாக  இருக்கலாம்  எனத்  தேர்தல்  ஆணையத்  தலைவர்  அப்துல்  அசிஸ்  யூசுப்  கூறினார்.

2013  பொதுத்  தேர்தலில் 86 விழுக்காட்டினர்  அதாவது 46,035  பேர்  வாக்களித்ததுடன்  ஒப்பிடுகையில்  இந்த  இடைத்  தேர்தலில்  வாக்காளர்  எண்ணிக்கை  குறிப்பிடத்தக்க  அளவு  குறைந்துள்ளது  என்று அப்துல்  ஆசிஸ்  கூறினார். இது ஏன்  என்பதை  இசி  ஆராயும்  என்றாரவர்.