பெர்மாத்தாங் பாவில் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தம்மைப் “பாட்டி” என்றும் 44-வயது பிஎன் வேட்பாளர் சுஹாய்மி சபுடின் இளம் வயதினர் என்றும் கூறுவோரைச் சாடினார்.
வான் அசிசா, பரப்புரைக்குச் செல்லும் நேரங்களில் பெரும்பாலும் கையில் விசிறியுடன் செல்வதால் அவரை “விசிறி பாட்டி” என்று அழைக்கிறார்கள்.
“பாட்டி என்று கூப்பிட்டுக் கொள்ளுங்கள், அதனால் என்ன? பாட்டி என்பதில் பெருமைப்படுகிறேன்”, என்றவர் நேற்று செப்ராங் பிறையில் ஒரு விருந்தில் கூறினார்.
மலேசியர்களுக்கு அண்மையில் இரண்டு மிகப் பெரிய துயரங்கள் நிகழ்ந்திருப்பதாக வான் அசிசா குறிப்பிட்டார். ஒன்று பொருள், சேவை வரி, இன்னொன்று பேச்சுச் சுதந்திரத்தின் இழப்பு.
அண்மையில் கோலாலும்பூரில் ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணி தொடர்பில் வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 30-க்கும் அதிகமான அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசியா ஒரு “சுதந்திர” நாடு என வான் அசிசா குறிப்பிட்டார்.
“அப்படியிருக்க, எதற்காக வாயை மூடிகொண்டு பேசாதிருக்க வேண்டும்? இந்த நடவடிக்கையை ஏற்கவில்லை என்ற தெளிவான செய்தியைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு உணர்த்த தயவு செய்து வாக்களிக்க வாருங்கள்”, என பெர்மாத்தாங் பாவ் வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இனிமேல் பாட்டியானவர்கள் தேர்தலில் போட்டி இடக் கூடாது என்று ‘ultra kiasu’ ரிதுடுவான் தீ முன் மொழிவார் என்று எதிர்பார்ப்போம்!.
மலேசியா “சுதிந்திர நாடு” என்று நீங்களும் நம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், தங்கள் கணவருக்குக் கொடுக்கப் பட்ட தண்டனை நியாமானது என்று சொல்லாமல் சொல்லுகின்றீர்களோ என்று எனக்கு டவுட் வருது!
பாட்டி போடியிடக் கூடாது. கொள்ளு தாத்த போட்டியிடலாம் . பெண் முடளைமைச்சராக முடியாது, பெண்கள் அனைவரும் அசிசாவுக்கே வாக்களிக்க வேண்டும் . அது ஒரு பாடமாக அமையட்டும். . இந்திய வாக்காளர்களே இந்தியாவில் இந்திரா காந்தி பிரதமராக ,பெண் அதிபராக முடியும்,.ஜெயலலிதா முதலவராக முடியும். ஆனால் அசிசா முதல்வராக முடியாம செய்துவிட்டார்கள். அதைய ம.இ.கா மகளிர் உணர்4து வாக்களிக்க vENdum
அக்காவுக்கு காஜாங் கவனிக்கவே நேரமில்லை…வயசு ஆவுதுல அதான்,..மற்றவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் ..பதவி வெறி யாரை விட்டுச்சி…இன்னும் உள்ளே இருந்து ஒன்னு கூவிகிட்டுதான் இருக்கு…பாவம்..
சாந்தியோட மற்ற மாமனுங்க எல்லாம் அவன் அவன் தொகுதிக்கு அப்பப்போ வந்து கண்ணுலே விளக்கெண்ணை ஊற்றிகிட்டு கவனிக்கிரானுங்க…. சாந்தி அக்கா ஒரே அடிய கொடி தூக்குது.?
தேர்தல் நேரதுலேதான் வாக்குக்கா நம்மள கையே காலே பிடிப்பானுங்க … அப்புறம் ” பழைய குருடி கதவை திரடிந்கிற” கதைதான்.
மகாதிர் சாமி வேலு,பழனி வேலு விடவா அசிசாவூகு வயது அதிகம் சாந்தி போன்ற கூலி அரசியல்வாதி எழுட்டாலரகளால் தான் இன்ட nilaimai