1எம்டிபி-இன் நடப்பு, முன்னாள் தலைவர்கள் பிஏசி விசாரணைக்கு அழைக்கப்படுவர்

nur-jazlநாடாளுமன்றப்  பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி) மீதான  புலனாய்வை  மே  19-இல்  தொடங்கும்.

அதில்  முதலில்  சாட்சியம்  அளிக்க  கருவூல  தலைமைச்  செயலாளர்  இர்வான்  சிரிகார்  அப்துல்லாவும் பொருளாதாரத்  திட்டமிடல்  பிரிவு(இபியு)  தலைமை  இயக்குனர்  ரஹ்மாட்  பீவி  அப்துல்லாவும்  வருவார்கள்  என பிஏசி தலைவர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  தெரிவித்தார்.

அதைத்  தொடர்ந்து அந்நிறுவனத்தின்  தலைவரும்  தலைமை  செயல்  இயக்குனருமான  அருள்  கந்தாவும்  1எம்டிபி-இன்  முதல்  தலைமை  செயல்  அதிகாரியான  ஷாருல்  இப்ராகிம்  ஹல்மியும்  பிஏசி  உறுப்பினர்களைச்  சந்திப்பர்.

ஷாருல்  2009 மார்ச் மாதம்  தொடங்கி  2013 மார்ச்வரை  1எம்டிபி  சிஇஓ-வாக  இருந்தார். அதன் இவ்வாண்டு  தொடக்கத்தில்  அருள்  பொறுப்பேற்றார்.

“அரசாங்கத்துக்குச்  சொந்தமான அந்நிறுவனத்தின்  செயல்பாடுகள்  நிதி ஆதாரங்கள்  குறித்து  கவலை  கொண்டிருக்கும்  மக்களிடையே  பலப்பல  தோற்றப்பாடுகளும்  ஊகங்களும்  நிலவுகின்றன”, என்று  நூர்  ஜஸ்லான்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

பிஏசி  அவ்விவகாரத்தை  முழுமையாக புலனாய்வு  செய்ய  விரும்புகிறது  என்றும்  அதனால்  புலனாய்வுக்கு  முடிவுத்தேதி  எதுவும்  நிர்ணயிக்கப்படவில்லை  என்றும்  அவர்  சொன்னார்.