ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஃபாரா என் அப்துல் ஹாடி-யைத் தற்காக்க முன்வந்த இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், பார்க்க வேண்டியது விளையாட்டாளர்களின் சாதனையைத்தானே தவிர உடையை அல்ல என்று குறைகூறுவோரைச் சாடினார்.
“ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஃபாரா நீதிபதிகளையே வியக்க வைத்து நாட்டுக்குத் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்.
“அவரது செயல்கள் சரியா, தப்பா என்பதை இறைவன்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அல்ல. விளையாட்டாளர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்”, என கைரி நேற்றிரவு டிவிட் செய்திருந்தார்.
ஃபாரா ஜிம்னாஸ்டிக் போட்டிக்குரிய உடை அணிந்திருந்ததை இணையத்தில் குறைகூறியவர்களுக்கு கைரி இவ்வாறு எதிர்வினை ஆற்றியிருந்தார்.
அமினோ வளர்த்து விட்ட முல்லாக்கள் தானே இன்றும் உள்துறை அமைச்சகத்திலும் பிற இலாக்காக்களிலும் அமர்ந்து கொண்டு மதம் எனும் போர்வையில் மந்தி போல் ஆடுகின்றனர். அப்புறம் ஏன் குத்துதே குடையுதே என்ற கதறல்?
எனையா பயுகிரீர், இதற்க்கு தானே ஆசைபட்டாய் அம்நோகாரா? மத வெறியை துண்டிவிட்டு விட்டு இப்பொழுது உமக்கு ஏன் ஆத்திரம்?
மதம் மதம் என்று மதம்பிடித்து அலையும்மஞ்சக்காமலைக் கண்களுக்கு எல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும் !
இந்த ஈன ஜென்மங்களுக்கு அது மட்டும் தான் கண்களுக்கு தெரியும். இதிலிருந்து தெரிய வில்லையா இவன்களின் மட்டரக புத்தியைபற்றி?