முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி தம் குறைகூறல்களிலிருந்து தப்பிக்க “அரசாங்க இரகசியச் சட்ட”த்தின் பின்னே ஒளிந்து கொள்கிறது எனச் சாடியுள்ளார்.
“என்னுடைய எல்லாக் குறைகூறல்களையும் தவறு என்கிறது 1எம்டிபி. ஆனால், அதற்குச் சான்றுகள் எதையும் காண்பிக்கவில்லை. கேட்டால் அது அரசாங்க இரகசியம் என்று கூறப்படுகிறது”, என்றாரவர்.
1எம்டிபி-க்கு முன்பிருந்த திரெங்கானு முதலீட்டு நிறுவனம் (டிஐஏ), அதன் கடன்களுக்கு அதன் எண்ணெய்க் கிணறுகளை ஈடு வைக்க மறுத்ததால் கூட்டரசு அரசாங்கம் அந்த ரிம5பில்லியன் கடனுக்கு உத்தரவாதம் வழங்கியது.
“இந்த ரிம5 பில்லியன் கடன்மீது அமைச்சரவையில் அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அப்படி இருந்தால் அறிக்கையைக் காண்பியுங்கள், பார்க்கலாம். கேட்டால் அமைச்சரவை அறிக்கைகள் இரகசியமானவை என்பீர்கள்”, என மகாதிர் அவரது வலைப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஐயா, நீரும் உமது ஆட்சிக் காலத்தில் இதைத்தானே செய்தீர். அப்புறம் ஏன் குத்துதே குடையுதே என்று கதறுகின்றீர். ஒவ்வொரு தடவையும் இந்நாட்டின் உச்ச நீதிமன்றங்கள் அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய போதெல்லாம் சட்டத்தை உடைத்து வேறு உருவாக்கினீர். அதில் இந்த இரகசியக் காப்புச் சட்டமும் ஒன்று. இப்ப நீங்கள் விடுவது ஓநாயின் ஓலம். அனுபவி ராஜா, அனுபவி.
“தன் வினை தன்னைச் சுடும்” என்பது எவ்வளவு உண்மை. இருப்பினும் மக்களுடன் சேர்ந்து கேள்விக்குரல் கொடுப்பதற்கு நன்றி!!
விதத்தை அறுவடை செய்கிறார் மகாதிர் ! மீண்டும் மக்களுக்குத்தான் சுமை ! இப்போது மகாதிரின் எதிர்ப்பு மலேசியருக்கு தேவையா இல்லையா ?
உமது ஞானம் இனி பயன்படுமா என்பதே சந்தேகம்.
நாட்டு மக்களை, ஆழ்ந்த கடனில் தள்ளிக் கொண்டிருக்கும் ஒருசிலரின் ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்க மக்களுக்கு இம்மாதியான தலைவர்களின் ஆதரவு குரல் தேவையே!! இல்லையேல், அராஜக சட்டங்களைக் கொண்டு மிரட்டி மக்கள் வாயை அடைக்க அதிக நேரம் பிடிக்காது!!! அவதியுறப்போவது நாமும் நமது வாரிசுகளுமே!!!
உன் ஆட்சி காலத்தில் தொடங்கிய அசிங்கமான அரசியல் பழிவாங்கும் அரங்கேற்றம் இப்பொழுது தொடர்கிறது. ஆச்சரியம் பட ஒன்றும் இல்லை. நீங்கள் விதைத்த விதை தற்பொழுது வளர்ந்துள்ளது. அன்று இன ரீதியில் பழிவாங்கும் செயலை செயல் படுத்தாமல் இருந்தால் இன்று உங்கள் கருத்தை மக்கள் கேட்பார்கள். ஆனால் காலம் மாறிப்போச்சு. மலேசியர்கள் உன்னுடைய சுயரூபத்தை அறிந்துகொண்டனர்.
இன்னும் நாட்டு நடப்பு தெரியாத புண்ணியவான்கள் .பழங்கதை பேசியே பொழுதை போக்கும் படித்த மேதைகள் .
மஹா திருடனே ,,,, உன் பதவி காலத்தில் தனியார் மாயம் எற்ற அடிப்படையில் ,,,, நிறுவனக்களை உன் பினாமி பெயர்களில் நிறுவி இன்றும் ஆண்டு ஒன்றுக்கு ,,, மத்திய அரசாங்கமிடமிருந்து ஏறக்குறைய 30 பில்லியன் வருமானம் பெ ற்றுக்கொண்டிருக்கும் நீ வகுத்த சட்டம்தானட அது ,,,,அப்புறம் ஏனடா ஓலம் ,,,,திருட்டுக் கிழவனே,,,,
இனங்களுகிடையான (மதம்) பிரச்னை என்றால் “சுல்தான்”களுக்கு பின்னால் ஒளிந்து கொள்வதும் ; மற்ற (ஊழல், அதிகார துஷ்பிரயோகம்) பிரச்னை என்றால் “இரகசியக் காப்புச் சட்டத்தின்” பின்னால் ஒளிந்து கொள்வதும், BN அரசாங்கத்திற்கு கை வந்த கலையாயிற்றே.
சட்டத்தைக் கொண்டுதானே …..
காய் நகர்த்த முடியும் !!
” சட்டம் ஒரு இருட்டறை ”
நன்றாகச் சொன்னீர் “ஐய்யயோ” .