சிறையில் உள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு வரும் கடிதங்கள் தடுக்கப்படுவதாகக் கூறப்படுவதை உள்துறை அமைச்சு மறுத்துள்ளது.
அன்வார், பிப்ரவரி 10-இல் அவர் சிறையிடப்பட்டதிலிருந்து இதுவரை சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு எதிராக எந்தப் புகாரும் செய்ததில்லை எனவும் அமைச்சு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
“சிறைக்கு வெளியில் உள்ள சில தரப்புகள்தாம் சுங்கை பூலோ சிறை நிர்வாகம்மீது பலவாறாகக் குற்றஞ்சாட்டியுள்ளன”, என்று அது கூறிற்று.
அஹ்மட் மர்சுக் ஷாரி (பாஸ்- பாச்சோக்)-இன் கேள்விக்கு உள்துறை அமைச்சு இவ்வாறு பதில் அளித்திருந்தது.


























மாமோய் ,, உமக்கு இனி புறா காலில் கடிதம் கட்டி அனுப்புகிறோம்..அப்படியே மேலே பார்துகிட்டே இரு …