டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், சிலாங்கூரிலும் கிளந்தானிலும் பாஸ்- உடன் ஒத்துழைக்கும் பிகேஆரின் முடிவை டிஏபி ஏற்கிறதா அல்லது நிராகரிக்கிறதா என்பது குறித்து கருத்துரைக்க மறுத்தார்.
பக்கத்தான் ரக்யாட் செத்துவிட்டது என டிஏபி தெளிவாகவே கூறியிருக்கிறது என்று குறிப்பிட்ட லிம், ஆனால் அது பிகேஆருடனும் ஒத்த கருத்தையுடைய மற்ற கட்சிகளுடனும் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றார்.
பாஸுடன் ஒத்துழைக்கும் பிகேரின் முடிவை டிஏபி ஏற்கிறதா, அது தெரிந்தும் சிலாங்கூர் அரசுடன் அது தொடர்ந்து ஒத்துழைக்குமா என்று பினாங்கு முதலமைச்சரான லிம்மிடம் வினவப்பட்டதற்கு, “ஒவ்வொருவருக்கும் தனி நிலைப்பாடு இருக்கிறது. எனவே, அம்முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பது பற்றிக் கருத்துரைக்க இயலாது”, என்றார்.

























லிம் அவர்கள் திறமையாக காய் நகர்த்துகிறார்.
இதற்குப் பெயர்தான் அரசியல் சாணக்கியம். தொடரட்டும்!!!
அட போங்கடா நீங்கலும் உங்கள் மாங்கா கூட்டனியும், அதான் சந்தி சிரிச்சிருச்சே …ஊதுங்கடா சங்கு…..ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ …
ஒழுங்கு மரியதையா கூட்டனியை காப்பற்றுங்கள்,இறுமாப்ப இருகாதிர்கள் உங்கள தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்மையை செய்யுங்கள் ஆப்பு அடிக்கணும் நினைச்சிங்க மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுக்கு பெரிய ஆபா அடிச்சிடுவாங்க.ஜாகிரதை