அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் வரலாம்

 

cabinet reshuffleபிரதமர் நஜிப் ரசாக் அமைச்சரவையில் மாற்றங்கள் விரைவில் செய்யப்படலாம் என்று இன்று கோடிகாட்டினார். பல அமைச்சர்கள் இதனை முன்பு மறுத்துள்ளனர்.

அமைச்சரவை மாற்றங்கள் குறித்த ஊகங்கள் பற்றி வினவிய போது, அவர் அதனை மறுக்கவில்லை. ஆனால், பொறுமை காக்குமாறு கேட்டுக்கொண்டார்..

இன்று கோலாலம்பூரில் நடந்த அம்னோ உச்சமன்ற கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், காத்திருக்குமாறு கூறினார்.

இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் ஜி. பழனிவேல் அமைச்சரவையில் நீடிக்க மாட்டார் என்று அவர் குறிப்பிட்டார்.

“பழனிவேலுவின் அமைச்சர் பதவி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.

“இப்போதைக்கு மஇகா அதன் தலைமைத்துவம் குறித்து முடிவு எடுக்க வேண்டும்”, என்றாரவர்.

மஇகா சச்சரவுக்கு நீதிமன்றம் தீர்வு காண்பதை தாம் விரும்புவதாகவும் நஜிப் கூறினார்.