அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், கட்சித் தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு “அரசியல் நெருக்கடி”தான் காரணம் என்று வலியுறுத்தினார். 1எம்டிபி-க்கும் அதற்கும் தொடர்பில்லையாம்.
இன்று தெங்கு அட்னானைச் சந்தித்த செய்தியாளர்கள், 1எம்டிபி பிரச்னைக்குத் தீர்வுகாண கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால்தான் கட்சித் தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டனவா என்று வினவினர்.
“இல்லை, இல்லை, இதற்கும் எந்தப் பிரச்னைக்கும் தொடர்பில்லை.
“நடப்பு அரசியல் நெருக்கடியால்தான் கட்சித் தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன”, என்றாரவர்.
அரசியல் நெருக்கடி என்னவென்பதை தெங்கு அட்னான் விவரிக்கவில்லை. ஆனால், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் இடைவிடாத தாக்குதல்கள்தான் கட்சிக்குள் அரசியல் நெருக்கடி உருவாகியிருப்பதாக தெரிகிறது.
கட்சி உறுப்பினர்கள் நஜிப் ஆதரவாளர்கள் மகாதிரின் ஆதரவாளர்கள் எனப் பிரிந்து கிடப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் நஜிப்பின் தலைமையே ஆட்டம் கண்டிருக்கிறதாம்.


























அரசியல் நெருக்கடி என்றால் ம.இ.கா. நெருக்கடியாக இருக்குமோ! 1எம்டிபி என்பது சாதாரண விஷயம். அது எப்படி நெருக்கடியை உருவாக்கும்?
இதற்கு எந்த பணத்தின் மீது கை வைக்க போகிறார்களோ தெரியவில்லையே …… கடவுளே எங்களை காப்பாற்று ! ! !
அரசியல் நெருக்கடி மூயிடினின் பலம் கொண்ட ஜோகூரில் இருந்து ஆரம்பமாகிறது. மூஹிடினின் பொது அறிக்கைகள் குறைந்து உள்ளூர சதிராட்டம் போடுவது பொதுவாக எல்லோருக்குமே நன்றாகத் தெரியுது. அம்மாநிலத்தில் அரச குடும்பம் நம்பிக்கை நாயகனுக்கு விடுத்து வரும் சவால் மேல் சவால்கள் அது நம்பிக்கை நாயகனுக்கு எதிரணியை ஏற்படுத்த வளமான இடமாகத் தெரியுது. முன் எச்சரிக்கையாக அம்னோ தேர்தலை தள்ளிப் போட்டது நம்பிக்கை நாயகனை நேரிடையாக எதிர்க்கும் அடிமட்ட அம்னோ உறுப்பினர்களின் தெரு போராட்டத்திற்கு வழி வகுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். அப்படி வந்தால் நம்பிக்கை நாயகன் இராஜினமா செய்வதை விட வேறு வழியில்லை. பழனிவேலை விட மோசமான நிலைக்கு நம்பிக்கை நாயகன் தள்ளப் படுவார். பழனி முருகன் சிரிப்பார்!
நம்பிக்கை நாயகனா…