மசீச தலைமைச் செயலாளர்: பிடிஎன்னைக் கலைக்க வேண்டியதில்லை

ongதேசிய  குடிமையியல்  பிரிவு(பிடிஎன்) இனவாதம் பேசுவதை நியாப்படுத்தி  வந்தாலும் அதைக்  கலைக்க  வேண்டிய  அவசியமில்லை  என்கிறார்  மசீச  தலைமைச்  செயலாளர்  ஒங்  கா  சுவான்.

ஆனால், அதன்  பாடத் திட்டத்தைத்தான்  மாற்றி  அமைக்க  வேண்டும்  என்றாரவர்.  அதன்  நடப்புப்  பாடத்திட்டம் பயிற்சியாளர்களுக்குப்  பயனளிப்பதாக  இல்லை. அது  அவர்களைக்  குறுகிய- எண்ணம்  கொண்டவர்களாக  மாற்றி  விடுகிறது.

“நிர்வாகக்  கோளாறோ, அணுகுமுறையில்  தவறோ, ஏதோ  ஒன்று  சரியாக  இல்லை.

“அதனால்  அதை  மாற்ற  வேண்டும். குறுகிய- மனம்கொண்டு  மற்றவர்களைக்  கண்டனம்  செய்யும் போக்கைப் பெருந்தன்மை  கொண்ட போக்காக  மாற்ற  , என்று  ஒங்  கூறினார்.