பிரதமர்: சொந்த நலனுக்கு 1எம்டிபி பணத்தைப் பயன்படுத்தியதில்லை

pmபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  1எம்டிபி  பணத்தை  எடுத்து  சொந்தத்துக்கு  என்றும்  பயன்படுத்தியது  இல்லை  என்பதை  வலியுறுத்தியுள்ளார்.

“மீண்டும்  வலியுறுத்த  விரும்புகிறேன். 1எம்டிபி பணத்தைச்  சொந்த  நலனுக்குப்  பயன்படுத்தியதில்லை.

“வால் ஸ்திரிட் ஜர்னலின்  கூற்று தீய  நோக்கம்  கொண்டது.அதற்கு  நாட்டில்  உள்ள  சில  தரப்பினர்,  பிரதமர்  பதவியிலிருந்தும்  அம்னோ  தலைவர்  பதவியிலிருந்தும்  என்னை  வலுக்கட்டாயமாக  வெளியேற்ற  நினைக்கும்  சில  தரப்பினர்,  ஆதரவாக  உள்ளனர்”, என  நஜிப் ஓர்  அறிக்கையில்  கூறியிருந்தார்.