பேரணி அராஜகத்துக்கு இட்டுச் செல்லலாம், எஸ்யுபிபி கவலை

suppநாளை  கோலாலும்பூரில்  நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கும்  பேரணியைக்   கடுமையாகக்  கண்டிக்கும்  எஸ்யுபிபி  அது  போன்ற  செயல்கள்  மலேசியாவை  அராஜக   பாதைக்கு  இட்டுச்  சென்று  விடலாம்  என்று  கூறியது.

“ஆர்ப்பாட்டங்கள்  எதிர்- ஆர்ப்பாட்டங்கள்  என்னும்  அண்மைக்கால  போக்கு,   அவை  ‘மஞ்சள்  சட்டை  அணிந்திருந்தாலும்’  ‘சிகப்புச்  சட்டை  அணிந்திருந்தாலும்’, மலேசிய  வாழ்க்கைமுறைக்கு  ஏற்றதல்ல.

“இந்த  எதிர்மறையான  கலாச்சாரம்  அராஜகத்துக்கும்  குழப்பத்துக்கும்  வழிகோலும். தாய்லாந்தில்  ஏற்பட்டதைப்  போன்ற நிலவரம்  இங்கு  வேண்டாம். அங்கு  வன்முறை  தொடர்கிறது. துரதிர்ஷடவசமாக  உயிரிழப்பும்  ஏற்பட்டுள்ளது”, என  எஸ்யுபிபி தலைமைச்  செயலாளர்  திங்  சியு  இயு கூறினார்.

பேரணி  ஏற்பாட்டாளர்கள்  வரலாற்றுக்கு “மதிப்பளிக்கவில்லை  என்றும்  திங்  குறிப்பிட்டார்.  செப்டம்பர்  16 மலேசியா  உருவான  நாள். சாபாவுக்கும்  சரவாவுக்கும்  அது  முக்கியமான  நாளாகும்.

“அதற்கு  உரிய  மரியாதை  கொடுக்கப்பட  வேண்டும்”,  என்றாரவர். .