பிஎன் ஆதரவாளர்கள்: மகாதிர் மகன்கள் பெரும் பணக்காரர்களானது எப்படி?

probeடாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  புதல்வர்கள்  செல்வந்தர்களாக  விளங்குவது  எப்படி  என்பதை  மலேசிய  ஊழல்- தடுப்பு ஆணையமும்  போலீசும்  விசாரிக்க  வேண்டும்.

இதனை  வலியுறுத்திய  பிஎன்  ஆதரவாளர்  சங்கத்தின் துணைத்  தலைவர்  லீ  நான் சாங்,  முன்னாள்  பிரதமரின்  புதல்வர்கள்  மொக்சானி-யும்  மிர்சானும்  மலேசியாவின்  மிகப்  பெரிய  பணக்காரர்கள்  வரிசையில்   இடம்பெற்றது  எப்படி  என்பதை  அறிய  பொதுமக்கள்  ஆவலுடன்  காத்திருப்பதாகக்  கூறினார்.

“மகாதிர்  குடும்பத்தாரின்  செல்வச்  செழிப்புப்  பற்றிப்  பலரும்  அறிவர். அவர்கள்,  அவ்விரு  மகன்களும்  குறுகிய  காலத்தில்  பெரும்  செல்வத்தைப் பெற்றது  எப்படி  என்று வினவுகிறார்கள்.

“இதற்கான  ஆதாரங்கள்  சமூக  வலைத்தளங்களில்  காணக்  கிடக்கின்றன”, என்றவர்  கோலாலும்பூரில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.