முஸ்லிம் என்ஜிஓ: சீனத் தூதரகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டோம்

noஹரியான்  மெட்ரோ  கூறியிருப்பதுபோல்   சீனத்  தூதரின்   கருத்துகளுக்காக  அந்நாட்டுத்  தூதரகத்தின்முன்  முஸ்லிம்  பயனீட்டாளர்  சங்கம் (பிபிஐஎம்)  ஆர்ப்பாட்டம்  செய்யப்போவதில்லை.

இப்போதே மலேசியாவில்  நிறைய  ஆர்ப்பாட்டங்கள்  என்று  குறிப்பிட்ட பிபிஐஎம்  ஆலோசகர்  வாரியத்  தலைவர்  அஸ்வில்  துங்கு  அப்துல்  ரசாக்  இதற்கு  மேலுமா  வேண்டும்  என்று  வினவினார்.

“வேண்டாம்,  வேண்டாம்.  நாங்கள்  அதைச்  செய்யப்போவதில்லை. அவ்விவகாரம்  தொடர்பில்  செய்தியாளர்  கூட்டம்  மட்டுமே  நடத்தப்  போகிறோம்.

“வெளிவந்த  செய்தி  தப்பு. நான்  சொன்னதை  எடுத்துரைப்பதில்  தவறு  செய்து விட்டார்கள். ஏகப்பட்ட  ஆர்ப்பாட்டங்களால்  தலையிடிதான்”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.