முன்னாள் சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் வெளியில் வந்து 1எம்டிபி ஊழல் பற்றிய உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
போலீஸ் சிறப்புப் பிரிவு (எஸ்பி) முன்னாள் துணைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் அரசாங்கத்துக்கு எழுதி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு திறந்த மடலில் இவ்வாறு வலியுறுத்தினார்.
ஆகக் கடைசியாக கனியைச் சந்தித்ததை நினைவுகூர்ந்த ஹமிட், 1எம்டிபி விவகாரம் பற்றி அவர் துணிச்சலாகக் கருத்துரைத்ததாகக் குறிப்பிட்டார்.
அவ்விவகாரத்தில் எல்லாம் “தெள்ளத் தெளிவாக இருப்பதாய்” கனி கூறினாராம்.
“ஆனால், அவர் ‘பதவியிலிருந்து அப்புறப்படுத்த பிறகு’ மெளனமாகி விட்டார், வாயே திறப்பதில்லை”, என ஹமிட் அக்கடிதத்தில் குறிப்பிட்டார்.


























இச்செய்திக்கு போட்ட படம் பேசாமலேயே ஆயிரம் வார்த்தைகள் சொல்லுதே. அன்வார் முதன் முதலாக கைது செய்து கைதி கூடத்தில் அடித்து கண் கருமையான நாளில் இருந்து அக்குற்றத்தைப் புரிந்தவருக்கு உடந்தையாக இருந்து மாமக்தீரையே சுற்றலில் விட்டவராச்சே. இவரா வாய் திறப்பார்? திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி அல்லவா ஆகி விட்டது இவர் நிலை. இவர் வாய் திறந்தால் தன்னுடைய இதயத்தையும் காட்ட வேண்டி வருமே என்று இரண்டுக்குமே ரோஸ்லி டஹலான் வழக்கு மூலமாக ஒரு பூட்டு போட்டு பூட்டி விட்டார் நன்கொடை நம்பிக்கை நாயகன்.