பெர்சே: பெசாகாவின் ‘போர்’ முழக்கம் பொது ஒழுங்குக்கு ஒரு மிரட்டல்

rustamயாராவது  சவால் விடுத்தால் “போரிடவும்”  தாங்கள்  தயார்  என்று தேசிய  சீலாட்  கூட்டமைப்பு(பெசாகா)த் தலைவர்  அலி  ருஸ்தம்  மிரட்டியிருப்பது  பொது  அமைதிக்கு  ஒரு  மிரட்டல்  என்பதால்  அதை  போலீஸ்  விசாரிக்க  வேண்டும்  என  பெர்சே  வலியுறுத்தியது..

நேற்றிரவு  சீலாட்  நிகழ்வு  ஒன்றில்  பேசியபோது  அவ்வாறு  கூறிய   அலி,  மலாய்க்காரர்கள்  அவமதிக்கப்பட்டால்  பெசாகா  அதை  வெறுமனே  பார்த்துக்கொண்டிராது  என்பதைக்  காண்பிக்கவே  செப்டம்பர்  16 சிகப்புச்  சட்டைப் பேரணி  ஏற்பாடு  செய்யப்பட்டதாகக்  கூறினார்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைப் பதவி  விலகக்  கோரி  நடத்தப்பட்ட  பெர்சே  4 பேரணிக்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கவே  சிகப்புச்  சட்டைப்  பேரணி  நடத்தப்பட்டது.

“அமைதிப்  பேரணி  நடத்தப்பட்டு  அரசாங்கத்துக்கு  மிரட்டலாக  விளங்கும்  போதெல்லாம் அதி தீவிர  மலாய்  அமைப்புகள்  இதுபோன்று  எச்சரிக்கை  விடத்  தொடங்கி  விடுகின்றன.

“இப்படிப்பட்ட  அணுகுமுறை  கண்டிக்கப்பட  வேண்டும்,  நிறுத்தப்பட  வேண்டும்.  ஏனென்றால்  அது கருத்து மாறுபாடு  கொள்ளும்  ஜனநாயக  உரிமைக்கே  குழி  பறிக்கிறது.

“இப்படி  மிரட்டுவது  அமைதியையும்  இனங்களுக்கிடையிலான  உறவுகளையும்  கெடுத்து  விடுகிறது. இவ்வளவு  பேசும்  அவர்கள்மீது  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்படுவதில்லை”, எனத்  தேர்தல்  சீரமைப்புக்காக  போராடும்  பெர்சே  ஓர்  அறிக்கையில்  கூறீற்று.