மூத்தோர் மன்றம்: மகாதிரின் பரிந்துரையை இடித்துரைக்கிறார் நஜிப்

swipeமக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  தலைவர்  ஒருவரை  மக்களால்  தேர்ந்தெடுக்கப்படாத  ஒரு  மன்றம்  கட்டுப்படுத்துவது ஜனநாயகத்துக்கு  எதிரானது.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம்  வலைப்பதிவில் இவ்வாறு  பதிவிட்டுள்ளார்.

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர் முகம்மட்  பிரதமருக்கு  ஆலோசனை  கூற  மூத்தோர்  மன்றம்  ஒன்றை  அமைக்கலாம்  என்று  பரிந்துரைத்திருந்தார்.  அப்படி  ஒரு  மன்றம்  பிரதமர்   மற்றவர்களின்  கருத்துகளை  அறிய  உதவியாகவும்  இருக்கும்  என்றார்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட  தலைவரைக் கட்டுப்படுத்த  ஒரு  அமைப்பை  உருவாக்குவது  நாட்டின்  அமைதிக்கும்  மேம்பாட்டுக்கும்  தூணாகவுள்ள  ஜனநாயக  முறையைவிட்டு  விலகிச்  செல்ல  முனைவதாகும்”, என  நஜிப்  கூறினார்