ஊடகங்கள் அடுத்த மாத அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனக் கட்சித் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெரிவித்துள்ளார்.
முதன்முதலாக இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுவதாகக் கூறிய அவர், இணைய செய்தித்தளங்கள் செய்திகளைத் திரித்துக்கூறும் பழக்கத்தைக் கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம் என்றார்.
“உங்களைப் போன்ற இணைய செய்தித்தளங்கள்தான் செய்திகளைத் திரித்துக் கூறி விடுகிறீர்களே”, என அவ்விவகாரம் பற்றி வினவிய மலேசியாகினியிடம் தெங்கு அட்னான் கூறினார்.
இக்கட்டுப்பாடு அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் தொடக்கவுரைக்கும் பொருந்துமா என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு: “அதை(செய்தி சேகரிப்பதை) அனுமதிப்பதா, வேண்டாமா என்று பரிசீலிக்கிறோம். முடிவுரையைப் பற்றியும்தான்”, என்றார்.
அம்னோ உதவித் தலைவர்கள் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் ஹிஷாமுடின் உசேனும் ஒவ்வொரு நாளும் செய்தியாளர் கூட்டம் நடத்துவார்கள் என்றும் அவற்றில் ஆண்டுக் கூட்டத்தின் நடப்புகள் பற்றி விளக்கமளிக்கப்படும் என்றும் தெங்கு அட்னான் தெரிவித்தார்.


























நேரத்திற்கு தகுந்தபடி நாடகமாடும் கட்சி! வெட்கமில்லை, மானமில்லை, ரோசமில்லையே!
இரு போட்டித் தரப்பும் அவரவர் முகத்தில் கரியைப் பூசிக்கொள்வதை யாரும் பார்க்கக் கூடாது, காறித் துப்பக் கூடாது. ‘Politics without principle by unprincipled politicians’.
கொக்கரிப்பு வாயன்இவன் புழு புழுத்து சாகும் நாட்கள் வெகு தூரமில்லை
நான்கு சுவருக்குள் நடக்கும் புருஷன் மனைவி உறவா இது ??????????
இதிலிருந்து தெரியவில்லையா இந்த கம்மனாட்டிகளுக்கு தங்களின் மேலேயே நம்பிக்கை இல்லை என்று? எல்லாம் தில்லு முள்ளு நாதாரிகள்.
ஊடலும் கூடலும் இருக்கும் இடத்தில் ஊடகங்களுக்கு என்ன வேலை என்று சொல்லுகிறாரோ!