அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அடுத்த ஆண்டு பிப்ரவரி 15, 16ஆம் நாள்களில் ஆசியான் நாடுகளின் தலைவர்களை கலிபோர்னியாவின் சன்னிலாண்ட்சில் சந்திக்கிறார்.
இந்த அமெரிக்க- ஆசியான் உச்சநிலை மாநாடு பற்றி வெள்ளை மாளிகை டிசம்பர் 30-இல் அறிவித்ததாக வியட்நாம் செய்தி நிறுவனம் கூறிற்று.
இப்படி ஒரு மாநாடு இதற்குமுன் நடந்ததில்லை என்றும் கூறப்பட்டது.
“அந்த உச்சநிலை மாநாடு, கோலாலும்பூரில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புதிய அமெரிக்க- ஆசியான் பங்காளித்துவத்தின்கீழ் அரசியல், பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்களில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும்”, என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

























