
தற்காப்புக்காக என்றாலும் ஒருவரைக் கொல்வது சரியல்ல என்பதைப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்காத வழகுரைஞர் மன்றத்தையும் மனித உரிமை வழக்குரைஞர்களையும் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் சாடினார்.
கொள்ளையன் ஒருவனைக் குத்திக்கொன்ற ஒருவர்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறித்து பொதுமக்கள் தங்கள் ஆத்திரத்தை இணையத்தில் பதிவு செய்திருப்பது குறித்து கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு சாடினார்.
“குற்றவியல் சட்டம் பிரிவு 99, தற்காப்பின் எல்லையைத் தெளிவாக வரையறுக்கிறது. பொதுமக்களுக்கு மட்டுமல்ல போலீசுக்கும் அது பொருந்தும்.
“ஒருவர் நம்மைக் கொள்ளையிட வந்தால் அவரைக் கொல்லலாம் என்பதில்லை.
“இந்த இடத்தில்தான் வழக்குரைஞர் மன்றம் மக்களுக்குக் கல்வி புகட்ட வேண்டும்…..அது ஏன் மெளனம் சாதிக்கிறது?”, என்று காலிட் செய்தியாளர் கூட்டமொன்றில் வினவினார்.


























என்னமோ நீ பெரிய வோக்கியன் மாதிரி பேசற உன் பேரே மலேசியாவில் நாரி போயி கிடக்கு போலிஸ் துறையே உன்னால் நாசமா போயி ஊழல் போலிஸ் துறை மலேசியா போலீஸ்க்கு முதலிடம் என்று உலக முழுவதும் டுப்புரத்தை கவிநிடா உன் சகா shafi ..மவனுக்கு மட்டும் சொல் மற்ற வளகுரைன்யர்கள் நேர்மையானவர்கள் உன்னை போல் போலி போளிச்கரனுக்கு உதவ வரமாட்டாங்க
ஒரு காமுகன் ஒரு பெண்ணை கற்பழிக்க வந்தால் அந்த பெண் நிச்சயமாக தன்னை காப்பாற்றிக்கொள்ள போராடுவாள் ( அவள் ( ஐஜிபி யின் மகளாய் இருந்தாலும் கூட) .அப்போது அந்தநிலையில் அந்த காமுகனுக்கு எதிர்பாராத விதமாக எதுவும் ஏற்படலாம் .தற்காப்புக்காக எடுக்கப்படும் அவசர சூழ்நிலை இருக்க அது எப்படி கொலைக் குற்றமாகும் ? .இவர் கூறுவதை பார்த்தால் கற்பழிக்க வரும் காமுகனிடம் போராடாமல் ஒத்துழைக்க சொல்வார் போலும் .சட்ட திட்ட அமலாக்கத்திற்கு பெயர் பெற்ற நமது அண்டை நாடான சிங்கபூரிலும் ,தற்காப்புக்காக ஏற்பட்ட உயிர் சேதத்திற்கு இது வரை எந்த நபருக்கும் மரண தண்டனை கிடைத்ததில்லை .