1எம்டிபி விசாரணைகளில் குறுக்கீடு இல்லை: அபாண்டி வலியுறுத்து

interசட்டத்துறைத்  தலைவர்  அபாண்டி  அலி,  1எம்டிபி விசாரணைகளில் குறுக்கீடும்  கிடையாது  என்பதை  இன்று  மீண்டும்  வலியுறுத்தினார்.

விசாரணைகளில்  தலையீடு  நிகழ்ந்திருப்பதாகக்  கூறப்படுவது  குறித்து  வழக்குரைஞர்  மன்றத்  தலைவர்  திரு  கவலை  தெரிவித்திருப்பது  பற்றி  வினவியதற்கு  அதற்கு ஆதாரமில்லை  என்று  அபாண்டி  கூறினார்.

“தவறான  தகவல்களின்  அடிப்படையில்  அவ்வாறு  கூறப்பட்டுள்ளது.  முதற்கண், 1எம்டிபி  விசாரணைகளில்  எந்தக்  குறுக்கீடும்  இல்லை”,  என்றாரவர்.

மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையத்துக்கு போலீஸ்  சென்றது  என்றால், தகவல்  கசிவு  பற்றி புகார்  வந்ததை  அடுத்து  விசாரிக்கச்  சென்றதே  தவிர,  எம்ஏசிசி-இன்  விசாரணையைத்  தடுப்பதற்காக  அல்ல  என்று அபாண்டி  வலியுறுத்தினார்.

இதைக்  குறுக்கீடு  என்று  யாரும்  பொருள்  கொண்டு  விடக்கூடாது  என்றும்  அவர்  கேட்டுக்கொண்டார்..