தலைமை நீதிபதி: தீர்ப்பைப் படிக்காமல் எங்கள்மீது தீர்ப்புச் சொல்லாதீர்

arifinநாட்டின்  தலைமை  நீதிபதி  அரிபின்  ஜக்கரியா,  நீதித்துறை  விமர்சனங்களை  வரவேற்பதாகக்  கூறினார்.  ஆனால்,  மக்கள்  குறைகூறுவதற்குமுன்  தீர்ப்புகளை  நன்கு  படித்துப்  பார்க்க  வேண்டும்.

“மக்கள்  தீர்ப்புகளை  நன்கு  அலசி  ஆராய்ந்து  எங்கு  தவறு  செய்தோம்  என்பதைத்  தெரிவிக்க  வேண்டும்.

“ஆனால்,  அவர்கள்  அப்படிச்  செய்யாமல்  எங்களை  இதயமற்றவர்கள்  என்றெல்லாம் அழைக்கிறாரக்ள்……அது  தேவையற்றது,  அது  விமர்சனமல்லவே”,  என்றாரவர்.

தீர்ப்புகளைக்  குறை  சொன்னதற்காக  எவரும்  கைது  செய்யப்பட்டதில்லை  என்பதையும்  அரிபின்  குறிப்பிட்டார்.