துணைப் பிரதமரின் மெய்க்காவலர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை

robbசுமார்  மூன்று  வாரங்களுக்குமுன்  துணைப்  பிரதமர்  அஹமட் ஜாஹிட்  ஹமிடியின்  மகள்  வீடு  கொள்ளையிடப்பட்டது. நேற்று  அவரின்  மெய்க்காவலர் வீடு.

வெட்டுக் கத்திகள்  ஏந்திய  கொள்ளையர்  கும்பல்  ஒன்று, நேற்று  காலை  மணி  9.30க்கு  பண்டார்  புக்கிட்  மக்கோத்தா-வில்  உள்ள  துணைப்  பிரதமரின்  மெய்க்காவலரான  ஒரு  போலீஸ்  அதிகாரியின்  வீட்டுக்குள்  புகுந்ததாக  த சன்  இணையத்தளம்  கூறிற்று.

போலீஸ்  அதிகாரி  அப்போது  வீட்டில்  இல்லை. கொள்ளையர்கள்  கத்தியைக்  காண்பித்து  மனைவி,  பிள்ளைகளை  மிரட்டி  பணம்,  மின்பொருள்கள், நகைகள்  ஆகியவற்றை  எடுத்துச்  சென்றிருக்கிறார்கள்.

யாருடைய  வீடு  என்பதைத்  தெரிந்தே  கொள்ளையிட்டிருக்கிறார்கள்.  அந்த  அதிகாரியின்  ஆயுதம்  எங்கே  என்று  கேட்டிருக்கிறார்கள்.  அவர்  அப்போது  கடமையில்  இருந்ததால்  கையோடு  எடுத்துச்  சென்று  விட்டார். அதனால்  அது  அவர்களிடம்  சிக்கவில்லை.