பொருளாதாரச் சிக்கலுக்குப் பிரதமரே பொறுப்பேற்க வேண்டும், புவா

puaஉலகப்  பொருளாதாரம்  சுணக்கமடைந்துள்ள  இவ்வேளையில்  மலேசியா  வலிவாற்றலுடன்  விளங்கத்  தவறியதற்கு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்தான்  முழுப்  பொறுப்பேற்க வேண்டும்   என்கிறார்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா.

எண்ணெய்  விலை  உயர்ந்தும்  உலகளவில்  வட்டி  விகிதங்கள்  குறைந்துமிருந்த  ஆண்டுகளில்  மலேசியாவுக்கு  அளவில்லா  ஆதாயம்  கிடைத்தது.

“அவரது (நஜிப்) ஆட்சியில்,  எண்ணெய்  பீய்பாய்க்கு  100 டாலருக்குமேல்  விற்ற  காலத்தில்  கிடைத்த அந்த  மிகை  வருமானமெல்லாம்  என்னவாயிற்று?”,  என்றவர்  வினவினார்..

எண்ணெய்  விலை  வீழ்ச்சி  அடையும் காலத்தில்  அல்லது  உலகப்  பொருளாதாரம்  சுனக்கம்  அடையும்  காலத்தில்  ஏற்படக்கூடிய   சிக்கல்களைச்  சமாளிக்க,   அன்று எண்ணெய்  விலை  உயர்ந்திருந்த  காலத்தில்  குவிந்த  ஆதாயத்தைச்  சேமித்து வைத்திருக்க  வேண்டும்  அல்லது  முதலீடு  செய்திருக்க  வேண்டும்  என்று  புவா  ஓர்  அறிக்கையில்  குறிப்பிட்டார்.

நாடு சவால்மிக்க  பொருளாதார  நிலவரத்தை  எதிர்நோக்கும்  என  நஜிப்பே  ஒப்புக்கொண்டிருப்பது  அவரது  அரசாங்கத்தின்  உருமாற்றத்  திட்டமும் (ஜிடிபி)  பொருளாதார  உருமாற்றத்  திட்டமும்  எதிர்பார்த்த  இலக்கை  எட்டவில்லை  என்பதைக்  காட்டுகிறது.

“நாம்  அனைத்துலக  எண்ணெய்  விலையையும் அமெரிக்காவின்  வட்டி  விகிதத்தையும்  நம்பி  இருக்கிறோம்  என்று  அவரே  (நஜிப்)  ஒப்புக்கொண்டிருப்பது,  அவரது  ஆட்சியில்  நாடு  அடைந்த  மிதமான  முன்னேற்றத்துக்கூட  உயர்ந்த  எண்ணெய்  விலைகளும்  மிகக்  குறைவாக  இருந்த  உலக  வட்டி  விகிதங்களும்தான்  காரணமே  தவிர  அவரது  பொருளாதார  மேலாண்மை  காரணம்  அல்ல  என்பதை  நிரூபிக்கிறது”, என்று  புவா  குறிப்பிட்டார்.