மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் பொங்கல் கொண்டாட்ட வாழ்த்துகள்

 

1psmஇந்த 21-ஆம் நூற்றாண்டில், பொங்கல் பெருநாள் மனித குலத்திற்கு அதிமுக்கியமாக விளங்கும் உணவு மற்றும் இயற்கையைp பாதுகாக்கும் கடமையை நினைவூட்டும் ஒன்றாக அமைய வேண்டும்.

 

நமது முன்னோர்கள் இந்த பொங்கலைக் கொண்டாடும் பொழுது, இயற்கை வளங்கக் காத்து அதன் அவசியத்தையும் அர்த்தத்தையும் உணர்ந்து கொண்டாடினர். இதுவே, மனிதனின் உணவுக்கு உத்தரவாதமாக அமைந்தது.

 

ஆனால், இன்று முதலாளித்துவ நவீன காலத்தில், மனிதர்கள் இயற்கையை அழிக்கின்றனர்; இலாபத்திற்காக உணவு வளங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. நிலங்கள் மேம்பாட்டிற்கு பறிக்கப்பட்டு, விவசாயம் பாழ்படுகிறது. இப்போது மக்கள் பதப்படுத்தப்பட்ட மற்றும் செயற்கை முறையிலான உணவுகளை உட்கொள்கின்றனர். இதுதான் பல்வகை தீரா நோய்களுக்கு வழிவகுக்கிறது.

 

பொங்கல், இலாபத்திற்கான பொருளாதாரத்தை முன்வைக்காமல், இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு முக்கிய செய்தியை மக்களுக்கு கொண்டு செல்வதாலே சோசியலிசவாதிகள் பொங்கலை போற்றுகின்றனர். ஒரு தரப்பினர் மட்டுமே இலாபம் அடையும், சொத்துக்கள் குவிக்கும் பொருளாதார முறையை சோசியலிசவாதிகள் எதிர்க்கின்றனர். இதை எதிர்த்தே சோசியலிசவாதிகளின் வர்கப் போராட்டம் தொடர்கிறது.

 

இலாபத்திற்கு மட்டுமே முன்னுறிமை வழங்கும் பொருளாதாரம் மற்றும் அரசியல் தொடர்ந்தால் நமது விவசாயத்துறை தற்கொலை செய்யும்; உணவு பாதுகாப்பு அழிந்துவிடும். ஆக, வாருங்கள் நாம் அனைவரும் பொங்கல் பெருநாளை அதன் உண்மையான நோக்கத்தை உணர்ந்து கொண்டாடுவோம்.

 

பொங்கல் ஒரு பெருநாள் மட்டுமல்ல, அது மனிதனின் பேராசையை எதிர்த்து போராட தூண்டும் ஒரு விழாவாகும். இந்தப் போராட்ட சிந்தனையோடு நாம் பொங்கலை கொண்டாடுவோம்.

 

வாழ்க போராட்டம்! வாழ்க பொங்கல்!

 

எ. சிவராஜன், பி.எஸ்.எம் பொதுச்செயலாளர்