பொருளாதாரச் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலும் அது சுகாதாரச் சுற்றுப்பயணிகளின் வருகையைப் பாதிக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார்.
மலேசியாவில் சுகாதாரச் சுற்றுப்பயணத் துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதாகவும் 2014-இல் 800,000 சுற்றுப்பயணிகள் மருத்துவ சிகிச்சை நாடி வந்தார்கள் என்பதை மலேசிய சுகாதாரச் சுற்றுலா மன்ற (எம்எச்டிசி) அறிக்கை காண்பிப்பதாகவும் சுப்ரமணியம் தெரிவித்தார்.
2015-இலும் சுகாதாரச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்று கூறிய அமைச்சர் அந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் மார்ச் மாதம்தான் கிடைக்கும் என்றார்.
பங்களாகாரனும், இந்தோனேசியகாரனும் சுகாதாரச் சுற்றுப் பயணம்
செய்தது பொய்யில் ஓர் உண்மை.
ஐயா சுப்ரமணியரே! வேலை பர்மிட் வைத்திராமல், சுற்றுபயண விசாவை வைத்துக் கொண்டு நிறைய வெளிநாட்டவர் [தொழிலாளிகள்] நமது மருத்துவமனைகளை நாடி வருவது தெரியுமா உமக்கு? இப்போதெல்லாம் மருத்துவமனைகளில் உள்ளூர் வாசிகளைவிட, வங்காளதேசிகள், மியன்மார்காரர்கள், இந்தோனேசியர்கள், நெப்பாளியர்கள் என பெருகி விட்டார்கள்.
பாவம்! அவரும் மனிதர் தானே! இதிலாவது நிறையைச் சொல்லுங்கள்!