உபகாரச் சம்பளம்: டாக்டர் சுப்ரமணியம் மௌனம் களைவாரா?, குலா கேட்கிறார்

 

kula-280x300ஜேபிஎ எனப்படும் அரசாங்க உபகாரச் சம்பளம் நிறுத்தப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்கிறார் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன்.

 

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் இது வரையில் வெளிநாடுகளிலும் உள்நாட்டுப்  பல்கலைக்கழகங்களிலும் பயிலுவதற்காக கொடுத்து வந்த இந்த நிதியை  திடீரென்று நிறுத்துவது கொடுமையானது என்று வர்ணித்த குலா,  தங்கள் கனவு நிறைவேற கடின உழைப்பைப்  போட்டு காத்திருந்த மாணவர்களுக்கு அது கை கூடி வரும் வேளையில் பேரிடியாக இந்த செய்தி வந்துள்ளது என்றார்.

 

அதுவும் எந்த முன்னறிவிப்புமின்றி டாக்டர் வீ கா சியோங் அமைச்சரவையில்  எழுப்பிய கேள்விக்கு இது பதிலாக மட்டுமே தெரிவிக்கப்பட்டது. இது இந்த அரசாங்கம் வெளிப்படையான போக்கை கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவாகாக் காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

 

700 பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு வாய்ப்பு  மறுக்கப்பட்டிருக்கும் வேளையில், அதில்  இந்திய மாணவர்கள் ஒரு 140 பேர் ஆகிலும் இருந்திருக்க வாய்ப்புண்டு என்று குறிப்பிட்ட குலா, மாரா உபகாரச் சம்பளங்களில் மாற்றம்  ஒன்றும் கிடையாது என்பதைச் சுட்டிக் காட்டி   இந்த ஜேபிஏ  உபகாரச் சம்பளத்தில் மட்டும் கையை வைப்பது நியாமானதல்ல என்றார்.

 

“இந்த வேளையில் ம.இ.காவின் இளைஞர் பிரிவின் தலைவர் சிவராஜுக்கு  நான் நன்றி சொல்லகடமைப்பட்டுள்ளேன். மாணவ்ர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தச் சிரமத்தை போக்க அரசாங்கம் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருப்பது வரவேற்கக் கூடியது.  ம.சீ.ச சார்பில் வீ கா சியோங் பேசிவிட்டார், ம.இ.கா சார்வில் அதன் இளைஞர் பிரிவின் தலைவர் பேசிவிட்டால் மட்டும் போதுமா?”, என்று அவர் வினவினார்.

 

ஏன் சுப்ரா மௌனம் காக்கிறார்?

 

“ம.இ.காவின் தேசியத் தலைவராகவும், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரே இந்தியப் பிரதிநிதியாகவும் இருக்கும் சுகாதார அமைச்சர் subraடாக்டர்  எஸ். சுப்ரமணியம் ஏன் மௌனமாக இருக்கின்றார்?” என்று கேள்வி எழுப்பிய குலா, வீ கா சியோங் அமைச்சரைவையில் இது பற்றி கேள்வி எழுப்பிய போது ம.இ.க தலைவரின்  நிலைப்பாடு என்னவாக இருந்தது என்று தெரியவில்லை!

 

“இந்த உபகாரச் சம்பளத்தினால் அதிகமாக பாதிப்படைவோர் நம் இன மக்கள் என்று தெரிந்தும் இவர் வாளாவிருப்பது இதன் தாக்கத்தை அவர் அறிந்திராமல் இருக்கின்றார் என்று கொள்ளலாமா?

 

“ஏழை இந்திய மாணவர்களின் எதிர்கால இலட்சியங்களைத் தவிடுபொடியாக்கிவிட்ட இந்த உபபகாரச் சம்பள நிறுத்தம் ம.இ.கா தலைவருக்கு பெரிய பொருட்டாக தெரியவில்லையோ?

 

“வேறு எந்த ஒரு வாய்ப்பும் வழங்கப்படாத நிலையில், ஜேபிஎ  உபகாரச் சம்பளத்தையே நம்பியிருந்த இந்தமாணவர்கள் நிலை குறித்து அவர் ஏன் அமைச்சரவையில் பேசவில்லை?

 

“மாணவர்களின் கண்ணீர், படிப்பில் அந்த உச்சத்தை எட்ட அவர்கள் போட்ட உழைப்பு , அதற்காக அவர்களின் பெற்றோர்கள் பட்டத் துன்பங்கள் ஆகியவற்றை எல்லாம் உணர்ந்திருக்கும் ஒரு தலைவராக டாக்டர் சுப்ரமணியம்  இருந்திருந்தால், வீ கா சியோங்கிற்கு  முன்னதாக  இந்த உபகாரச் சம்பள நிறுத்தத்தை  ஆட்சேபித்திருக்க வேண்டியவர் அவராகத்தான் இருந்திருக்க வேண்டும்”, என்று  குலசேகரன் அவரது கருத்தை வலியுறுத்தினார்.

 

“கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் விளைந்த நிதிப் பற்றக்குறையை ஈடு செய்ய, வேறு வழிகளை  ஆராயாமல் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பாழடிக்கும் இது போன்ற செயல்கள் இந்த அரசாங்கத்தின் நிலையற்ற கொள்கையைக் காட்டுகிறது”, என்று அவர் அரசாங்கத்தைச் சாடினார்.

 

டாக்டர் எஸ். சுப்ரமணியம் உடனடியாகப் பிரதமரிடம் நிலைமையை விளக்கிக் கூறி இந்த உபகாரச் சம்பளம் மீண்டும் நிலைநிறுத்தப்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று குலசேகரன் கேட்டுக்கொண்டார்.