கிறிஸ்துவர்களை இழித்தும் பழித்தும் பேசிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் சரவாக்கில் கால் பதிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (எஸ்யுபிபி) கேட்டுக் கொண்டிருக்கிறது.
படித்தவர்கள் கிறிஸ்துவத்தைப் புறக்கணிப்பதாக ஹாடி பாஸ் கட்சிப் பத்திரிகையான ஹராகாவில் குறிப்பிட்டிருப்பதை எஸ்யுபிபி தலைமைச் செயலாளர் செபாஸ்டியன் திங் சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்துவ பாதிரிமார்கள் ஆப்ரிக்காவிலும் சாபா, சரவாக்கிலும் கல்வி கற்காத மக்களை அணுகி அவர்களுக்குப் பணம் கொடுத்தும் மற்ற வகை உதவிகளைச் செய்தும் மதமாற்றம் செய்ய முயல்கிறார்கள் என்றும் ஹாடி குற்றஞ்சாட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.
“கிறிஸ்துவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர் பகிரங்கமாக மீட்டுக்கொள்ளாதவரை அவரை இம்மாநிலத்துக்குள் வர அனுமதிக்கக் கூடாது”, என திங் கூறினார்.
எல்லா மதத்தினரும் படிக்காத பாமர மக்களை , வறுமையில் அல்லல் படும் மக்களை நாடி இப்படித்தான் மதம் மாற்றம் செய்கிறார்கள். அதில் கிறிஸ்தவத்தை மட்டும் குற்றம் சாட்டுவது முறையல்ல.
சரியாக சொன்னீர்கள் ,நீலவாணன் .
இந்த நாட்டில் சாபாவிலும் சரவாக்கிலும் என்ன நடந்தது நடக்கிறது? இஸ்லாம் எப்படி பரவியது? தெற்கிழக்கு ஆசியாவில் இஸ்லாத்திற்கு முன் எந்த சமயம்
எப்படி அதிலிருந்து மதம் மாறினார்கள். சில நாதாரிகளுக்கு பொய் பேசியே வழக்கம்- பொய்யை தொடர்ந்து கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற மடத்தனம். ஈன ஜென்மங்கள்.