பிடிஎன்னைச் சீரமைக்க வேண்டும்- அஸ்லினா

azalவெவ்வேறு  வகை  பாதுகாப்பு  மிரட்டல்கள்  நிலவுவதைப்  பார்க்கையில்  தேசிய  குடிமையியல்  பிரிவை(பிடிஎன்)ச்  சீரமைக்க  வேண்டிய தேவை  இருப்பதாகக்  கருதுகிறார்   பிரதமர்துறை  அமைச்சர்  அஸ்லினா  ஒஸ்மான்  கூறினார்.

மக்கள்  அரசாங்கத்துக்கு  சிறந்த  “கண்களாகவும்  காதுகளாகவும்”  இருத்தல்  வேண்டும்  என்றாரவர்.

“தேசிய  பாதுகாப்பை  அச்சுறுத்தும்  மருட்டல்களை  மக்கள்   உணர்ந்திருக்க  வேண்டும்.  ஆனால்,  அவர்கள்,  அதிலும்  குறிப்பாக  இளைஞர்கள்  அதை  உணர்ந்திருப்பதாக  தெரியவில்லை.

“தேசிய  தலைவர்களின் படங்களைக்  காலில்  போட்டு  மிதித்தல்  போன்ற  மரியாதைக்குறைவான  செயல்கள்,  ஐஎஸ்  தற்கொலை  குண்டு  வெடிப்பாளர்கள்,  சாபாவின்  கிழக்குக்  கரையில்  நடந்துள்ள  ஆள்கடத்தல்  வேலைகள்  போன்றவற்றையும்  எண்ணிப்  பாருங்கள்”, என  அஸ்லினா ஓர்  அறிக்கையில் கூறினார்.

கடுமையான  குறைகூறல்களுக்கு இலக்கான   பிடிஎன்னைச்  சீரமைப்பதற்குப்  பட்டறைகளை  நடத்த  சிவில் சமூகத்தைச்  சேர்ந்த  சுயேச்சை  உறுப்பினர்கள்  அடங்கிய  வாரியம்  ஒன்று  அமைக்கப்ப்பட்டிருப்பதாக  அறிவிப்பு  வந்ததைத்  தொடர்ந்து  அஸ்லினாவின்  அறிக்கை  வெளிவந்துள்ளது.