ஐஎஸ்-ஸில் உரிமைகளே இருக்காது, என்று என்எஸ்சி-யை நியாயப்படுத்துகிறார் நஜிப்

conferசிவில்  உரிமைகளுக்குக்  கோரிக்கை  விடுக்கும்  மலேசியர்களுக்கு  தீவிரவாத  ஐஎஸ்  ஆட்சியில்  ஒரு  உரிமையும்  இருக்காது  என்பதை   பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நினைவுறுத்தினார்.  ஆகவே, தேசிய  பாதுகாப்பு  மன்ற  சட்டவரைவு  கொண்டுவரப்பட்டது  நியாயமே  ஆகும்  என்றாரவர்.

கோலாலும்பூரில்  பாதுகாப்பு   மீதான  மாநாட்டில்  உரையாற்றிய  நஜிப்,  தீவிரவாதிகளின்  மிரட்டல்களுக்கு  எதிரான  நடவடிக்கை  எல்லாம்  நாட்டைப்  பாதுகாக்கத்தான்   என்றார்.

“இதைச்  சொல்ல  விரும்புகிறேன்.  ஐஎஸ்  ஆட்சியில்  சிவில்  உரிமைகள்  கிடையாது. பயங்கரவாதச்  செயலில்  ஈடுபடுவோருக்கு  எதிராக  எந்தப்  பாதுகாப்பும்  இருக்காது.

“சிவில்  உரிமைகளைப்  பாதுகாக்க  சிறந்த  வழி  நாட்டின்  பாதுகாப்பை  உறுதிப்படுத்துவதுதான்.

“அந்தப்  பாதுகாப்பை  நிலைநிறுத்த  நடவடிக்கைகள்  எடுப்பதற்காக  நான்  வெட்கப்படவில்லை”, என்று  நஜிப்  கூறினார்.