ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது எம்எச்370-இன் இரண்டாவது பகுதியாக இருக்கலாம்

mhஇந்தியப்  பெருங்கடல் தீவான  லா  ரீயுனியனில்  கண்டெடுக்கப்பட்ட  ஒரு  பொருள்  காணாமல்போன  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்  370  விமானத்தின்  இரண்டாவது  பகுதியாக  இருக்கலாம்  என  ஒரு  செய்தி  நிறுவனம்  அறிவித்துள்ளது.

கடலோரமாக  மெதுஓட்டத்தில்  ஈடுபட்டிருந்தபோது  ஜோன்னி  பெக்  என்பார்   அதைக்  கண்டெடுத்தார்  என  ஏஎப்பி   செய்தி  நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை  கூறியது.

இதே  மனிதர்தான்  விமானத்தின்  சிறகுப்  பகுதி  எனக்  கருதப்படும்  பொருள்  ஒன்றைக்  கடந்த  ஆண்டு  ஜூலையில்  கண்டெடுத்துக்  கொடுத்தார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

அப்பொருள்  காணாமல்போன  விமானத்தின்  ஒரு  பகுதி  என்றே  உறுதியாக  நம்பப்படுகிறது  என  ஏஎப்பி  கூறிற்று.

எம்எச் 370, 2014  மார்ச்  8 அதிகாலையில்  239  பயணிகளையும்  விமானப்  பணியாளர்களையும்  ஏற்றிக்கொண்டு  கோலாலும்பூரிலிருந்து  பெய்ஜிங்  நொக்கிப்  பறந்து  கொண்டிருந்தபோது  காணாமல்  போனது.