மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) ஏற்கனவே போட்டிருந்த திட்டத்தை மாற்றி நேற்று திடீரென்று முதலைமைச்சர் லிம் குவான் எங்கின் அலுவலகத்தை முற்றுகை இட்டதாக டிஏபி தஞ்சோங் எம்பி இங் வை ஏய்க் கூறினார்.
அதற்குமுன் எம்ஏசிசி, லிம் ரிம2.8மில்லியனுக்கு பங்களா வீடு வாங்கியது குறித்த விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் தன் அலுவலகம் வரலாம் என்று கூறி இருந்தது.
“அப்படிச் சொன்ன மறுநாளே எம்ஏசிசி அதிகாரிகள் தங்கள் தொடக்கத் திட்டத்தை மாற்றிக்கொண்டு சிஎம் அலுவலகம் வந்தார்கள், திடீர் சோதனை நடத்த.
“எம்ஏசிசி-இடம் ஏன் இந்த ஊசலாட்டம்?”, என இங் வினவினார்.
நேற்று பிற்பகல் 3மணி அளவில் மலேசியாகினியும் சிஎம் அலுவலகம் சென்றது, ஆனால், அதன் செய்தியாளர்களால் எம்ஏசிசி அதிகாரிகளைச் சந்திக்க. முடியவில்லை. அவர்கள் சிஎம் அலுவலகத்தினுள் இருந்தனர். மாலை மணி 5-க்கு அவர்கள் வெளியேறியதாக தெரிகிறது..


























இதில் இருந்து தெரியவில்லையா …….. எம் எசிசி அம்னோவின் கைப்பாவை என்று . அம்னோ தலைகள் மீது புகார் வந்தால் விசாரணை தூங்கும். எதிர் கட்சி என்றால் உடனடி நடவடிக்கை . இதுதான் bersih cekap dan amanah . உலகம் நம்மை பார்த்து கேலி செய்கிறது .