அன்வாருக்கு ரிம200,000 இழப்பீடு கொடுக்க நீதிமன்றம் உத்துசானுக்கு உததரவு

payஅவதூறு  வழக்கு  தொடர்பில்  அம்னோவுக்குச்  சொந்தமான  உத்துசான்  மலேசியாவின்  மேல்முறையீட்டைத்  தள்ளுபடி  செய்த  முறையீட்டு  நீதிமன்றம்  முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  இழப்பீட்டுத்  தொகையாக  ரிம200,000   கொடுக்குமாறும்  உத்தரவிட்டது.

உத்துசானின் வழக்குரைஞர்  முன்வைத்த  வாதங்களை  ஏற்பதற்கில்லை  என்று  நீதிபதி  பிரசாத்  சந்தோசம்  தம்  தீர்ப்பில்  கூறினார்.

உத்துசான்  வழக்குச்  செலவாக  ரிம5,000  கொடுக்க  வேண்டும்  என்றும்  அவர்  உத்தரவிட்டார்.

நீதிபதி  பிரசாத்  சந்தோசத்துடன்  நீதிபதிகள்  சபரியா  முகம்மட்  யூசுப்,  அஸ்மாபி  முகம்மட்  ஆகியோரும்  அந்த  மேல்முறையீட்டை  விசாரித்தனர்.