ஐஎஸ் உருவாக உதவியவர்களே நீங்கள்தானே: அரசியல்வாதிகளையும் உலாமாக்களையும் சாடுகிறார் மரினா

marinaஐஎஸ்  பயங்கரவாதிகள்  உருவாகக்  காரணமானவர்களே  இப்போது  பயங்கரவாதக்  கும்பல்களோடு  சேராதீர்கள்  என்று  அறிவுரை  கூறுகிறார்கள்  எனச்  சமூக  ஆர்வலர்  மரினா  மகாதிர்  சாடினார்.

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  மகளான  மரினா  டிவிட்டரில்  இவ்வாறு  கூறினார்.

ஐஎஸ்ஸில்   சேராதிருத்தல்  என்பது  ஆயுதம்  ஏந்தாமலிருப்பது  மட்டுமல்ல. ஐஎஸ்  தீவிரவாதிகள்போல்  சிந்திக்காமல்  இருப்பதும்  அதில்  அடங்கும்  என்றாரவர்.

“நிறைய  பேர்  வன்முறையை  நாடாதிருக்கலாம்.  ஆனால்  ஐஎஸ்  போன்றுதான்  சிந்திக்கிறார்கள்.

“அதனால்தான்  அரசியல்வாதிகளும்  உலாமாக்களும்  ‘ஐஎஸ்ஸில்  சேராதீர்’  என்று  கூறுவதைக்  கேட்கும்போது ‘வாயை  மூடுங்கள்,  அவர்கள்  உருவாக  உதவியவர்களே  நீங்கள்தானே’  என்று  கூவ  வேண்டும்போல  தோன்றுகிறது”,  என்று  மரினா  குறிப்பிட்டார்.