குரங்குக் கூட்டம் அஞ்சல்காரரைத் தாக்கி இராணுவ இரகசியங்களைத் திருடிச் சென்றது

monkeyமலாக்கா    இராணுவ  முகாமுக்குள்   புகுந்த   குரங்குக்  கூட்டம்  ஒன்று      இராணுவத்தின்    இரகசிய    ஆவணங்கள்  சிலவற்றைத்   திருடிச்  சென்றதாம்.

திரெண்டாக்   முகாமில்   அஞ்சல்காரர்   ஒருவர்   கடிதங்களைப்   பட்டுவாடா   செய்து    கொண்டிருந்தபோது    அவரைத்   தாக்கிய    குரங்குக்   கூட்டம்  அவரிடமிருந்த   மூன்று   இரகசிய    ஆவணங்களைப்  பறித்துச்  சென்றதாக     த   ஸ்டார்    அறிவித்துள்ளது.

சில  வினாடிகளில்    தாக்குதல்  நடந்து   முடிந்து   விட்டது.  அச்சம்பவத்தில்   33-வயது   அஞ்சல்காரர்  சொற்ப   காயங்களுக்கு   ஆளானார்.

இரண்டு   நாள்களுக்குமுன்   நடந்த   அச்சம்பவம்   குறித்து   போலீசில்   புகார்   செய்யப்பட்டது.  போலீஸ்   இப்போது   நீண்ட  வால்  கொண்ட  அந்த  மகாக்  வகை  குரங்குகளைத்   தேடிக்  கொண்டிருக்கிறது.

இப்படி   நடப்பது   முதல்முறை  அல்ல. 18 மாதங்களுக்குமுன்   ஒரு  படைவீரரின்   காரை   உடைத்து  உள்ளே புகுந்த   குரங்குகள்   அவர்  வைத்திருந்த   பணம்,  ஏடிஎம்   அட்டை,   காரோட்டும்   உரிமம்,   ஸ்கூபா  உடைகள்   எல்லாவற்றையும்    அள்ளிச்  சென்று  விட்டனவாம்.