வழக்கு முடியும் முன்னரே புத்ரா ஜெயாவைக் குற்றவாளி ஆக்க முயல்வதா? டிஓஜேமீது கேஜே ஆத்திரம்

kj1எம்டிபி     தொடர்புடைய     சிவில்     வழக்கில்    புத்ரா  ஜெயாவும்  ஒரு  குற்றவாளிதான்  என்பதுபோல்   அமெரிக்க  நீதித்துறையின்  பேச்சும்  நடவடிக்கைகளும்    இருப்பதாக  அம்னோ  இளைஞர்   தலைவர்  கைரி  ஜமாலுடின்   கூறினார்.

“அவர்கள்  (விசாரணை முடிவுகளை)   அறிவித்த  விதம்   ஒரு  தீர்ப்புரை  போலவும்    (அதில்  பெயர்   குறிப்பிடப்பட்டவர்கள்)  குற்றாவாளிகள்   எனக்  கண்டுபிடிக்கப்பட்டு      தண்டிக்கப்பட்டது  விட்டதுபோலவும்   இருந்தது.

“அவர்கள்  பயன்படுத்திய  சொல்கள்  மலேசியாவையும்  அரசாங்கத்தையும்  குற்றவாளிகளாகக்  காண்பிக்கின்றன”,  என  நேற்றிரவு   சிப்பாங்கில்    புத்ரி  மற்றும்   அம்னோ  இளைஞர்   ஆண்டுக்  கூட்டத்தில்    கைரி  கூறினார்.

இது “நிரூபிக்கப்படும்வரை  ஒருவர்  நிரபராதியே”  என்ற  கோட்பாட்டுக்கு  முரணானது    என்றாரவர்.