மலேசிய தினத்தில் ஐஎஸ் தாக்குதல்?

polisசெப்டம்பர்  16  மலேசிய  தினத்தின்போது  ஐஎஸ்   தாக்குதல்   நடத்தும்   சாத்தியம்  இருக்கிறதாம்.

ஐஎஸ்   இயக்கத்தினர்    நாட்டில்   அவர்களின்  இருப்பை  உணர்த்த    அப்படி  ஒரு  தாக்குதலை   நடத்தும்   சாத்தியம்  இருப்பதாக    துணை  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்   அப்  போலீஸ்   நூர்  ரஷிட்   இப்ராகிம்     கூறினார்.

அண்மைக்  காலமாக   மலேசியாவில்    அவ்வியக்கத்தின்     நடவடிக்கைகள்   அதிகரித்துள்ளன     என்றாரவர்.

ஆனாலும்,  கவலை   வேண்டியதில்லை,   அந்த  இயக்கம்  மலேசியாவில்   உருவான  காலத்திலிருந்தே    அதன்    நடவடிக்கைகளை   போலீசார்   அணுக்கமாகக்   கண்காணித்து    வருவதாக   நூர்  ரஷிட்    தெரிவித்தார்.

“பொதுமக்கள்  போலீஸ்மீது   நம்பிக்கை  வைக்க   வேண்டும்”,  என்றவர்  கேட்டுக்கொண்டார்.

தேசிய  நாளின்போது   மூன்று  ஐஎஸ்  தீவிரவாதிகள்  தாக்குதல்    நடத்தத்  திட்டமிட்டிருந்தனர்.  ஆனால்,  போலீஸ்   அவர்களின்  திட்டத்தை  முறியடித்தது.