கேஎல்ஐஏ-இல் ஸ்ரீலங்கா தூதர் தாக்கப்பட்டது தொடர்பில் இருவர்மீது குற்றச்சாட்டு

courtமலேசியாவுக்கான   ஸ்ரீலங்கா   தூதர்    இப்ராகிம்   சாஹிப்பைத்   தாக்கியதாக  இன்று  சிப்பாங்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்   இருவர்மீது   குற்றம்   சாட்டப்பட்டது.

தமிழில்  வாசிக்கப்பட்ட   குற்றச்சாட்டை   ஒரு  வியாபாரியான   ஏ.கலைமுகிலனும்  டெக்சி   ஓட்டுனரான   வி.பாலமுருகனும்  மறுத்தனர்.

செப்டம்பர்  4  ஞாயிற்றுக்கிழமை ,  பிற்பகல்  மணி   3க்கு   சிப்பாங்கில்  உள்ள  கோலாலும்பூர்   அனைத்துலக   விமான  நிலையத்தில்   அவ்விருவரும்,   இன்னும்  பிடிபடாமலிருக்கும்   மேலும்  நால்வருடன்  சேர்ந்து,  அக்குற்றச்  செயலைச்   செய்ததாகக்    கூறப்பட்டது.

அவ்விருவரும்   ரிம7,000 பிணையில்   விடுவிக்கப்பட்டனர்.  அவர்கள்மீதான  வழக்கு   அக்டோபர்  7-இல்  விசாரணைக்கு  வரும்.