உள்குத்து வேலைகள் வேண்டாம் : பிஎன் தலைவர்களுக்கு கெராக்கான் வலியுறுத்து

gerakanஅடுத்த     பொதுத்     தேர்தலில்    வெற்றிபெற   நினைத்தால்   பிஎன்   தலைவர்கள்   ஒன்றுபட்டிருக்க   வேண்டும்,   ஒருவரையொருவர்   மதிக்க   வேண்டும்  என   கெராக்கான்   மகளிர்   தலைவர்    டான்  லியான்   ஹோ   கூறினார்.

“14வது    பொதுத்    தேர்தலில்    வெற்றிபெற    பிஎன்   பங்காளிக்   கட்சித்   தலைவர்கள்   ஒருவரை    மற்றவர்    மதிக்க    வேண்டும்,   ஒருவருக்கொருவர்    உதவிக்   கொள்ள    வேண்டும்.

“அவமதிப்பது,   கேலி   செய்வது,   ‘பெரிய   அண்ணா’   தோரணையில்   ஆணவமாக    நடந்துகொள்வது     கூடவே  கூடாது”,  என  இன்று  கோலாலும்பூரில்  கெராக்கான்   பேராளர்    மாநாட்டில்   டான்   கூறினார்.

ஒரு  பெரிய   குடும்பத்தின்   உறவுபோல்   பங்காளிக்   கட்சிகளுக்கிடையிலான   உறவைப்  பேணிக்   காக்க     வேண்டும்     என்றாரவர்.

பிஎன்னில்   எழும்  சச்சரவுகள்     எதிரணியினருக்கு  நல்ல  வாய்ப்பாக   அமைந்து   விடும்.

நெருக்கடிமிக்க   தற்போதைய   அரசியல்   நிலைமையில்     உள்குத்து   வேலைகளை   உடனடியாக    நிறுத்திக்கொள்ள   வேண்டும்   என்றவர்     வலியுறுத்தினார்.