தேர்தல் தொகுதி சீரமைப்புக்கு எதிராக பிகேஆரும் டிஏபியும் 50க்கு மேற்பட்ட ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்தன

pkr dapபிகேஆர்  மற்றும்   டிஏபி-இன்  சிலாங்கூர்   கிளைகள்  தேர்தல்   தொகுதி   எல்லைச்  சீரமைப்புக்கு   எதிராக   50க்கு   மேற்பட்ட    ஆட்சேபனைகளைத்   தேர்தல்    ஆணையத்திடம்   இன்று    தாக்கல்    செய்தன.

தேர்தல்  தொகுதிச்  சீரமைப்பு    செய்யப்பட்டதில்     நியாயமில்லை   என்றும்   அது   அரசியல்   சார்புள்ளது    என்றும்   குறிப்பிட்ட   பகுதியில்   வசிக்கும்   இனங்களிடையே   பிரிவினையை    ஏற்படுத்தும்    என்றும்    அவை    கூறின.

சிலாங்கூரின்    எல்லாப்    பகுதிகளுமே    தேர்தல்    தொகுதி  எல்லைச்   சீரமைப்பால்    பாதிக்கப்படும்  என்பதை    அம்பாங்   எம்பி   சுரைடா    கமருடின்   சுட்டிக்காட்டினார்.

ஒரு  குறிப்பிட்ட   தொகுதியில்   குறிப்பிட்ட    இனம்தான்    பெரும்பான்மையாக   இருக்கும்    என்பதால்    ஒற்றுமை   பாதிப்புறும்   என்றார்.