பினாங்கு அரசு கடந்த ஐந்தாண்டுகளில் வெள்ளத்தடுப்புத் திட்டங்களுக்காகக் கிட்டத்தட்ட ரிம40 மில்லியன் செலவிட்டும் அப்பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என கெராக்கான் கூறியது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஹொங் சீ வெய், பினாங்கு பட்ஜெட் 2011-இலிருந்து 2015 வரை ஆறுகளை ஆழப்படுத்தவும் வெள்ளத்தடுப்புக்காகவும் ரிம38 மில்லியன் செலவிடப்பட்டதாகக் கூறுவதைச் சுட்டிக்காட்டினார்.
“செலவு செய்த பணமெல்லாம் வீண் விரயம்”, என்றாரவர்.
மக்கள் பணம் வீணடிக்கப்பட்டதற்கு பினாங்கு அரசுதான் பொறுப்பு என்றவர் குற்றஞ்சாட்டினார்.
திங்கள்கிழமை பினாங்கில் கடந்த இரண்டு வாரங்களில் நான்காவது தடவையாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

























